News March 16, 2024
அதிரடியாக 38 சாராய வியாபாரிகள் கைது

நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு போலீசார் இன்று அதிரடியாக சாராய வேட்டை நடத்தினார். இதில், 38 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 2540 லிட்டர் பாண்டி சாராயம் 90 மில்லி அளவுள்ள 50 மதுபாட்டில்கள் 180 மில்லி அளவுள்ள 105 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இத்தகவலை போலீஸ் சூப்ரண்ட் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
நாகை: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
நாகை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பட்டியல் வகுப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கத்தரி மற்றும் வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தின் தொழில்நுட்ப பயிற்சி வரும் 4 ந்தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் 3-ந் தேதிக்குள் 80567-08663 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொண்டு பதிவு செய்யலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
நாகை மக்களே… சுற்றுலா செல்ல அழைப்பு!

கோடியக்கரைக்கு பிப்.7அன்று இயற்கை அனுபவ சுற்றுலா செல்ல விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் இடம்பெயரும் பறவைகள், வனவிலங்கு சரணாலயம், பழமையான சோழர்கால கலங்கரை விளக்கத்தின் கடைசி சுவடு மற்றும் படகு சவாரி போன்ற காட்சிகளை காணலாம். இதற்கு வருகிற பிப்.5ம் தேதிக்குள் <


