News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 19, 2026
ஜனவரி 19: வரலாற்றில் இன்று

*1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். *1983 – நாஜி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். *2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. * 1855 – ஜி.சுப்பிரமணிய ஐயர், தமிழக இதழியலாளர் பிறந்ததினம். *1990 – இந்திய மதகுரு ஓஷோ மரணம்.
News January 19, 2026
Cinema 360°: ₹11 கோடி வசூலித்த TTT

*ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ 3 நாள்களில் ₹11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் *சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ டிரெய்லர் இன்று வெளியாகிறது *விக்ரம் பிரபுவின் சிறை ஜன.23-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *ரவி மோகனின் BRO CODE படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்
News January 19, 2026
மகாத்மா காந்தி பொன்மொழிகள்

*நீ உலகில் காண விரும்பும் மாற்றமாக நீயே மாறு. *அஹிம்சை என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த மிகப் பெரிய சக்தி. *எதிரியை அழிப்பதற்கு அல்ல, அவரது மனதை மாற்றுவதற்கே போராடு. *சுதந்திரம் என்பது விரும்பியதை செய்வது அல்ல; சரியானதை செய்வதே. *ஒரு தேசத்தின் முன்னேற்றம், அது பெண்களை எப்படி நடத்துகிறது என்பதிலே தெரியும்


