News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 1, 2026
ரஜினி ரசிகர்களுக்கு சிபி சக்கரவர்த்தி Promise

‘ரஜினி 173’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கதையை பட்டை தீட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரஜினி பட அறிவிப்பு வந்ததும் பலர் வாழ்த்தியதாகவும், சிலர் இவன் இயக்குநரா என பயந்ததாகவும் பகிர்ந்துள்ளார். அதேநேரம், இந்த படம் முடிந்து ரசிகர்கள் வெளியே வரும்போது முழு திருப்தி கிடைக்கும், இது என் Promise என உறுதியளித்துள்ளார்..
News February 1, 2026
அதிமுகவில் அடுத்தடுத்து இணைந்தனர்.. CM அதிர்ச்சி

தேர்தல் நெருங்கும் நிலையில் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் பிரதான கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திமுக, OPS ஆதரவாளர்கள், நாதக போன்ற கட்சிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். குறிப்பாக, இந்த கட்சி மாற்றம் கொங்கு மண்டலத்தில் நடப்பதால், அப்பகுதியை கைப்பற்ற வியூகம் வகுக்கும் CM ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
News February 1, 2026
குழந்தைகளின் நேரத்தை திருடும் ஸ்மார்ட் போன்

குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி 14- 16 வயதான 76% குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரீல்ஸ், கேமிங், சாட்டிங் என தினந்தோறும் 3- முதல் 6 மணி நேரத்தை செல்போனில் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் தூக்கம், சிந்தனை திறன், மனவலிமை உள்ளிட்டவற்றை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.


