News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 22, 2026
கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,250 ஆக உயர்வு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கருணை ஓய்வூதியம் ₹4,500-லிருந்து ₹5,000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,000-லிருந்து ₹2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
News January 22, 2026
TTV தேர்தலில் போட்டியிடவில்லையா?

EPS-க்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த TTV தினகரன், CM வேட்பாளராக EPS இருக்கும் NDA கூட்டணியில் நேற்று மீண்டும் இணைந்தார். இந்நிலையில் அமமுகவின் தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சட்டமன்ற தேர்தலில் 8+ 1 ராஜ்யசபா சீட்டை TTV கேட்டுள்ளார். மேலும் இந்த முறை தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், அந்த 1 ராஜ்யசபா சீட் மட்டும் கொடுத்துடுங்க என கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.
News January 22, 2026
நாங்கள் அரசியல் கட்சி அல்ல: OPS

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், OPS இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளார். இதனால் அவர் பக்கம் நின்ற முக்கிய தலைவர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மாற்று கட்சியில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் அரசியலில் சரியான முடிவு எடுக்காததால்தான் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுகின்றனரா? என செய்தியாளர்கள் கேட்க, நாங்கள் அரசியல் கட்சி அல்ல என OPS பதில் அளித்தார்.


