News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 11, 2026
திமுக அரசை அப்புறப்படுத்த சபதம் எடுப்போம்: நிதின் நபின்

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டார். அப்போது லஞ்ச, லாவண்யம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே மத்திய அரசின் கனவு என அவர் தெரிவித்தார். அதனால் திமுக அரசை இந்த மண்ணை விட்டு அகற்ற வேண்டும், இங்குள்ள அமைச்சர்கள், ஆன்மிகத்தை கொச்சைப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக அரசை அப்புறப்படுத்த அனைவரும் சபதம் எடுப்போம் என்றும் அழைப்பு விடுத்தார்.
News January 11, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 577 ▶குறள்: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.. ▶பொருள்:கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
News January 11, 2026
இந்தியாவுக்கு பின்னடைவு.. பண்ட் விடுவிப்பு?

NZ-க்கு எதிரான ODI தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பயிற்சியின் போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக 2024 ஆகஸ்டில் நடந்த SL-க்கு எதிரான ODI தொடரில் விளையாடினார். இடைப்பட்ட காலத்தில் அணியில் இடம்பெற்றாலும், Playing 11-ல் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போதும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்கிறது.


