News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 19, 2026
உங்கள் செல்போனில் உடனே இதை பாருங்க

➤Settings-ல் About device ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤version என்ற ஆப்ஷன் வரும், அதற்குள் சென்றால் Version Number இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால் developer option enable ஆகும் ➤மீண்டும் Settings-க்கு சென்று Additional Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤Developer option-ஐ க்ளிக் பண்ணி APPS ஆப்ஷனுக்குள் செல்லவும் ➤Dont Keep activities என்ற செட்டிங்கை ON பண்ணா Bg-ல் செயலிகள் இயங்காது. போனும் Hang ஆகாது. SHARE.
News January 19, 2026
EPS-ஐ சந்தித்தார் தனியரசு.. திமுக கூட்டணிக்கு முடிவா?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, EPS-ஐ சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள EPS-ன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுக கூட்டணியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அதனால் அங்கிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைய தனியரசு இசைவு தெரிவித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.
News January 19, 2026
பீர் குடித்தால் கிட்னி ஸ்டோன் கரையுமா?

பீர் குடித்தால் சிறுநீரக கற்கள் வெளியேற வாய்ப்புள்ளது என்றாலும் அது சரியான முறை அல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பீர் குடிப்பதால் அதிக சிறுநீர் வெளியேறும்போது அதனுடன் சிறுநீரகத்தில் இருக்கும் சிறிய (<5 mm) கற்களும் வெளியேறும். ஆனால், பெரிய கற்கள் வெளியேறாது. அதேநேரம், பீர் அதிகம் குடிப்பது புதிய கற்களை உருவாகவும், முன்னரே கற்கள் இருந்தால், வலி அதிகரிக்கவும் காரணமாகும் என்று எச்சரிக்கின்றனர்.


