News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 27, 2025
இந்தியாவில் போலி ரேபிஸ் தடுப்பூசியா?

இந்தியாவில் ரேபிஸ் நோய்த் தடுப்புக்காக ‘Abhayrab’ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் போலி தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2023, நவ.1-ம் தேதி முதல் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், ஆஸி.,-யில் பதிவு செய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
News December 27, 2025
முக்கிய ஆலோசனையில் காங்., காரிய கமிட்டி (PHOTOS)

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ராகுல், சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் சசி தாரூரும் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் நேஷனல் ஹெரால்டு வழக்கு, ஆரவல்லி பகுதி பிரச்னைகள், MGNREGA திட்டத்தில் மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
News December 27, 2025
வங்கி கணக்கில் ₹3,000.. வந்தாச்சு HAPPY NEWS

PM KISAN திட்டத்தில், நலிவடைந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கி வருகிறது. இதனை உயர்த்தி வழங்குமாறு விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், PM KISAN திட்ட தவணை தொகையை ₹3,000-ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு இருப்பதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.


