News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 9, 2025
உங்கள் செல்போனில் உடனே இதை பாருங்க

➤Settings-ல் About device ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤version என்ற ஆப்ஷன் வரும், அதற்குள் சென்றால் Version Number இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால் developer option enable ஆகும் ➤மீண்டும் Settings-க்கு சென்று Additional Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤Developer option-ஐ க்ளிக் பண்ணி APPS ஆப்ஷனுக்குள் செல்லவும் ➤Dont Keep activities என்ற செட்டிங்கை ON பண்ணா Bg-ல் செயலிகள் இயங்காது. போனும் Hang ஆகாது. SHARE.
News November 9, 2025
PM நிகழ்ச்சியில் பங்கேற்றால் கூடுதல் மதிப்பெண்களா?

உத்தராகண்டில் உள்ள பல்கலை.,யின் பெயரில், PM மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்றால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என ஒரு அறிக்கை வெளியானது பரபரப்பை கிளப்பியது. பாஜக இளைஞர்களை மூளை சலவை செய்ய முற்படுவதாக பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த பல்கலை.,யில் இருந்து அப்படி எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும், அது போலியானது எனவும் தெரியவந்துள்ளது.
News November 9, 2025
உனக்கென நான், எனக்கென நீ!

இந்த கணவருக்கு கண் பார்வை இல்லை. மனைவிக்கு காலில் பிரச்னை. ஆனால், கடவுளிடம் குறை கூறி கொண்டிருக்காமல், வாழ்க்கையை தாங்களே அழகாக்கி கொண்டுள்ளனர். பார்வையற்ற கணவனுக்கு இந்த மனைவி வழிதுணையாக இருக்க, அவள் காட்டிய பாதையில் தனது குழந்தையை சுமந்து செல்கிறார் இந்த கணவர். வாழ்க்கை துணை, வழி துணையாக மாறிய தருணம் அவர்களின் வாழ்க்கையை அழகாக்கியது மட்டுமின்றி, மற்ற தம்பதிகளுக்கு பாடமாகவும் அமைந்துவிட்டது.


