News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கு தேவையான,
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News January 21, 2026
வைத்திலிங்கம் திமுகவில் இணைய இதுதான் காரணமா?

KAS பேச்சுவார்த்தை நடத்தியும் மசியாத வைத்திலிங்கம், செந்தில் பாலாஜியின் காய்நகர்த்தலின்படி திமுகவில் இணைந்துள்ளார். இவருடைய இந்த முடிவுக்கு திரைமறைவில் நடந்த டீலிங் தான் காரணம் என்கின்றனர். அதாவது, வரும் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியின் சீட்டை வைத்திலிங்கம் (அ) அவரது மகன் பிரபுவுக்கு வழங்குவதாக ஸ்டாலின் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் திமுகவுக்கு தாவியுள்ளார் என்கின்றனர்.
News January 21, 2026
வெறுப்பு கருத்துகளை பேசுகிறார் உதயநிதி: கோர்ட்

சனாதன தர்மத்துக்கு எதிராக உதயநிதி வெறுப்பு கருத்துகளை பேசுவதாக சென்னை HC மதுரை கிளை சாடியுள்ளது. 2023-ல் சனாதனம் பற்றி பேசிய வழக்கை விசாரித்த கோர்ட், இந்து மதத்தின் மீது திகவும், திமுகவும் கடந்த 100 ஆண்டுகளாக தாக்குதல் நடத்துகின்றன என கூறியுள்ளது. மேலும், வெறுப்பு கருத்தை பேசுபவர்கள் தப்பித்துவிடுவதாகவும், அதனை எதிர்ப்பவர்களே தண்டிக்கப்படுவதாக கூறி அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.


