News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 14, 2026
உயிருடன் இருப்பவர்கள் ‘கொலை’: மம்தா

மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கை மூலம் 54 லட்சம் உண்மையான வாக்காளர்களை ECI தன்னிச்சையாக நீக்கியுள்ளதாக மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவால் உருவாக்கப்பட்ட AI டெக்னாலஜியை பயன்படுத்தி, உயிருடன் இருக்கும் பல வாக்காளர்களை ECI ‘கொலை’ செய்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை பயன்படுத்திய பெண்களின் பெயரையும் நீக்கி அதிகாரதுஸ்பிரயோகம் செய்துள்ளதாக சாடியுள்ளார்.
News January 14, 2026
மன அழுத்தத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படுமா?

உணவுகள் மட்டுமே நெஞ்செரிச்சலுக்கு காரணம் என நினைத்திருப்போம். ஆனால், மன அழுத்தத்தாலும் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தில் இருக்கும் போது நம்முடைய வயிற்றில் உள்ள அமில உற்பத்தியை, உடல் அதிகரிக்க செய்கிறது. இதனால் ஜீரண செயல்பாடு சரியாக நடக்காமல், நெஞ்செரிச்சல் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
News January 14, 2026
பொங்கல் பண்டிகை: இன்று முதல் தள்ளுபடி

Railone செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட்களை புக் செய்யும் போது, 3% தள்ளுபடி வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இச்சிறப்பு சலுகை வரும் ஜூலை 14-ம் தேதி வரை வழங்கப்படும். பெரும்பாலானோர் ரயில் டிக்கெட் புக் செய்ய IRCTC ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். RailOne ஆப்பின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற அதிகளவில் ஷேர் பண்ணுங்க.


