News April 23, 2025

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

image

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 28, 2025

கிருஷ்ணகிரியில் எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம்

image

கிருஷ்ணகிரியில் இன்று (28ம் தேதி) எரிவாயு முகவர்கள், நுகர்வோர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மாலை 4.30 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால், நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.

News November 28, 2025

UAN லாக் இன் செய்யாமல் PF பேலன்ஸ் செக் பண்ணனுமா?

image

‘9966044425′ என்ற எண்ணிற்கு, PF கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் கொடுத்தால், PF பேலன்ஸ் தொகை SMS-ல் வந்துவிடும். அதேபோல், ‘7738299899′ என்ற எண்ணுக்கு ‘EPFOHO UAN ENG’ என டைப் செய்து SMS அனுப்பினாலும், PF பேலன்ஸ் தொகையை பார்க்கலாம். இதற்கு உங்கள் UAN ஆக்டிவாகவும், KYC அப்டேட்டும் செய்திருப்பது அவசியம். ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

நெருங்கும் புயல்.. டெல்டாவுக்கு விரைந்த NDRF வீரர்கள்!

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து புதுச்சேரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களுக்கு 8 NDRF குழுவினர் விரைந்துள்ளனர்.

error: Content is protected !!