News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 552 ▶குறள்:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
▶பொருள்: ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
News December 17, 2025
பிரித்வி ஷாவின் சோகத்தை மறக்க வைத்த டெல்லி அணி

IPL மினி ஏலத்தின் முதல் செட்டில் பிரித்வி ஷாவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த பிரித்வி ஷா, இதயம் உடைந்த ஸ்மைலியுடன் ’IT’S OK’ என இன்ஸ்டாவில் விரக்தியுடன் பதிவிட்டிருந்தார். ஆனால் அடுத்த ரவுண்டில் பிரித்வி ஷாவை டெல்லி அணி அடிப்படை விலையான ₹75 லட்சத்துக்கு வாங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் பழைய பதிவை நீக்கிவிட்டு, BACK TO MY FAMILY என போஸ்ட் செய்துள்ளார்.
News December 17, 2025
ராஜஸ்தானில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ராஜஸ்தானில் SIR பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் , 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என ECI தெரிவித்துள்ளது. முன்னதாக <<18579079>>மே.வங்கத்தில்<<>> 58 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.


