News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 31, 2025
இன்றிரவு இந்த விஷயத்தில் கவனமா இருங்க!

இன்று இரவு இளைஞர்களை கையிலேயே பிடிக்க முடியாது எனலாம். புது வருடப்பிறப்பை முன்னிட்டு, கூட்டம் கூட்டமாக வண்டியில் ரவுண்ட்ஸ் அடிப்பதும், ஆடிப்பாடி கொண்டாடுவதும் என ஆனந்தமாக இருப்பார்கள், தவறில்லை. ஆனால், சந்தோஷம் என்ற பெயரில் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டி விபத்துக்களில் சிக்குவது வேண்டாமே. நன்றாக மனதில் வைத்து கொள்ளுங்கள் எப்போதும் உங்களுக்காக வீட்டில் ஒரு உயிர் காத்துக் கொண்டிருக்கும். SHARE IT.
News December 31, 2025
சொத்துப் பத்திரம் தொலைந்துவிட்டதா?

வீடு (அ) நிலத்தின் பத்திரம் ஒருவேளை தொலைந்துவிட்டால் முதலில் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்துவிட்டு, பத்திரிகையில் விளம்பரமும் கொடுக்க வேண்டும். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் போலீசிடம் NOT TRACEBLE என்ற சான்றை பெற்று நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று பெற வேண்டும். பின்னர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.
News December 31, 2025
ICC Ranking: டி20 மற்றும் ODI-ல் கெத்து காட்டும் இந்தியா!

2025-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதில் டி20 மற்றும் ODI போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய ஆண்கள் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால் டெஸ்ட்டில் 4-வது இடத்தில் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல், மகளிர் கிரிக்கெட்டில் டி20 மற்றும் ODI-களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலிடத்திலும், இந்திய மகளிர் அணி 3-ம் இடத்திலும் உள்ளது.


