News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
2-வது ODI: சவாலை மிஞ்சி சாதிப்பாரா ருதுராஜ்?

முதல் ODI-ல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், இன்று வாய்ப்பு கிடைத்தால் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ருதுராஜ் தள்ளப்பட்டுள்ளார். இன்றும் அவர் சறுக்கினால், 3-வது ODI-ல் பண்ட், திலக் வர்மா ஆகியோரில் ஒருவர் அவரின் இடத்தை பிடிக்கலாம். இந்த வாய்ப்புகளும் துணை கேப்டன் ஷ்ரேயஸ் அணிக்கு திரும்பும் வரை மட்டுமே. அவர் வந்தால், இந்த வாய்ப்பும் குறைந்துவிடும். சோதனையை எதிர்கொண்டு சாதிப்பாரா ருதுராஜ்?
News December 3, 2025
சமந்தாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த ராஜ் நிடிமொரு

சமந்தாவுக்கும், அவரது காதலர் ராஜ் நிடிமொருவுக்கும் கோவை ஈஷா ஆசிரமத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமான முதல் நாளே, ராஜ் நிடிமொரு சமந்தாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் என தகவல் கசிந்துள்ளது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஒரு அழகான வீட்டை சமந்தாவுக்கு பரிசளித்துள்ளாராம். விரைவில் இந்த புது வீட்டில் இருவரும் குடியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 3, 2025
BREAKING: இரவில் சந்திப்பு… மீண்டும் இணைகிறாரா OPS?

டெல்லிக்கு OPS சென்றுள்ள நிலையில், அவருக்கு பின்னாடியே குருமூர்த்தியும் விரைந்துள்ளார். இருவரும் நள்ளிரவில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. புதிய கட்சியை தொடங்குவதற்காக OPS டெல்லிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் NDA கூட்டணியில் இணைவது குறித்து நட்டாவை சந்தித்து பேசவிருக்கிறாராம். ஒருவேளை ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வந்தால், EPS எவ்வாறு அரசியல் காய்களை நகர்த்துவார் என கேள்வி எழுந்துள்ளது.


