News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 12, 2025
இராமநாதபுரம் ,மாவடடத்தில் பதிவான மழை அளவு

இராமநாதபுரம்,மாவடடத்தில் 2025ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பருக்குள் வரை பதிவான மொத்த மழை செ.மீட்டரில் அளவுகள் வானிலை ஆய்வு மையம் நிர்வாகம் கீழே அட்டவணைகளில் ஒவ்வொன்றாக பகுதிகளில் தரப்பட்டுள்ளது. அவைகளின் வருமாறு; பாம்பன் 148 செ.மீ, புள்ளுர் 145 செ.மீ, மண்டபம் 116 செ.மீ, மங்கலகுடி 106 செ.மீ, பெருங்குடி100செ.மீ உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.
News December 12, 2025
நாளை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை(டிச.13) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடுசெய்யும் விதமாக, வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்று அறிவிப்பு வெளியாகலாம்.
News December 12, 2025
ஒரு கூட்டு கிளியாக.. அண்ணன் தம்பினா இப்படி இருக்கணும்

வயதான பெற்றோரை சிலர் புறக்கணிக்கும் இக்காலத்தில், தாயை நான் தான் கவனிப்பேன் என சகோதரர்கள் பாச போராட்டம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் இருக்கிறார் அண்ணன். தம்பியோ, பண வசதியுடன் வேலையிலும் இருக்கிறார். ஆனால், ‘இரு மகன்களும் எனது இரு கண்கள்’ என்றார் பாசத் தாய். இறுதியில் பண வசதியுடன் உள்ள தம்பியிடமே உரிமையை ஒப்படைக்கிறது கோர்ட். நீங்க என்ன சொல்றீங்க?


