News April 23, 2025

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

image

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 27, 2025

பசுக்களுக்கும் Best Friends இருக்கு.. தெரியுமா?

image

மனிதர்களைப் போலவே பசுக்களுக்கும் சக மாடுகளுடன் நெருங்கிய நட்பு இருக்கிறது என நார்த்தாம்ப்டன் பல்கலை., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பசுவை அதன் Friend-யிடம் இருந்து பிரித்துவைக்கும் போது அவை மன அழுத்தத்திற்கு ஆளாகி, முரட்டுத் தனமாக நடக்கிறதாம். மீண்டும் அதன் Friend-வுடன் சேர்த்து வைக்கும்போது ஒருவித அமைதியை அவை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 99% பேருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 27, 2025

5 நாள்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: அமுதா

image

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ‘டிட்வா’ புயலால் காற்று மற்றும் மழை அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் வரும் 30-ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 27, 2025

BREAKING: செங்கோட்டையனுக்கு பதவி.. விஜய் அறிவித்தார்

image

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!