News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 17, 2025
கடலூர்: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 17, 2025
FLASH: ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதி

இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். SMAT தொடரில் விளையாடி வந்த அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெய்ஸ்வாலுக்கு இரைப்பை குடல் அழற்சி பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மும்பை அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது.
News December 17, 2025
குச்சி காளானில் இவ்வளவு நன்மைகளா?

சமீபத்தில் அதிபர் புடின், இந்தியா வந்திருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் குச்சி காளானும் இடம்பெற்றிருந்தது. சாதாரண காளான் கிலோ ₹200-க்கு விற்கப்படும் நிலையில், குச்சி காளானின் விலை கிலோ ₹6,000 ஆகும். ஏனெனில், இந்த அரிய வகை குச்சி காளானில் பல சத்துகள் உள்ளன. குச்சி காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.


