News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 13, 2025
மாரடைப்பு அபாயத்தை முன்பே கண்டறிய..

வயது வித்தியாசமின்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது. ஆனால், சில டெஸ்ட்களின் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே அறியலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. அதே நேரத்தில், மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.
News December 13, 2025
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

அதிமுக செயற்குழு & பொதுக்குழுவிற்கு பிறகு, மாற்றுக்கட்சியினர் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை EPS தீவிரப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில், அமமுகவின் ஐடி விங் மாநில துணைச் செயலாளர் இளையராஜா, திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டோல்கேட் ரெமோ, திருச்சி மாவட்ட கழக அவைத்தலைவர் ராமு, மாவட்ட மீனவரணி செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News December 13, 2025
பட்டாவில் வருகிறது மாற்றம்.. கூடுதல் விவரங்கள் சேர்ப்பு

தற்போது வழங்கப்படும் பட்டாவில் தாலுகா, கிராமம், உரிமையாளர் பெயர், சர்வே எண் உள்ளிட்ட பிரிட்டிஷ் கால விவரங்கள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. தற்போதைய நடைமுறைகள் இல்லாததால் குழப்பங்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை களையும் நோக்கில் விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகள், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பட்டாவில் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


