News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 8, 2026
திமுக கூட்டணியில் VCK தொடர்கிறது: திருமா

கடந்த 2 நாள்களாக அரசியலில் விவாதப்பொருளாக இருப்பது திமுக கூட்டணிக்குள் PMK (ராமதாஸ்) VCK வெளியேறும் என்பதுதான். இதை மையப்படுத்தி விசிகவினரும், பாமகவினரும் சோஷியல் மீடியாவில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் விசிக தொடருவதாகவும், திருபுவாதங்களுக்கும், அவதூறுகளுக்கும் இடம் தரும் வகையில் விசிகவினர் கருத்துகள் அமைந்துவிடக்கூடாது எனவும் திருமா அறிவுறுத்தியுள்ளார்.
News February 8, 2026
அப்துல் கலாமின் பொன்மொழிகள்!

* கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காணும் ஒன்று அல்ல, கனவு என்பது உங்களை தூங்கவிடாமல் செய்வது
* கனவுகள் நனவாக வேண்டுமானால், நீங்கள் முதலில் கனவு காண வேண்டும்
*காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
*சூரியனைப் போல் பிரகாசிக்க விரும்பினால், முதலில் நீங்கள் சூரியனைப் போல் எரிய வேண்டும்
News February 8, 2026
₹25,000 வரை இழப்பீடு:RBI

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரிக்கும் அதேநேரத்தில், டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் ₹25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என RBI அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் இதனை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற முடியும். பாதிக்கப்பட்டவர்களே மோசடி நபர்களுக்கு OTP அனுப்பி பணத்தை இழந்திருந்தாலும் இழப்பீடு வழங்கப்படும்.


