News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 7, 2026
ஆபாச படம் பார்க்கிறீர்களா.. 7 ஆண்டு சிறை உறுதி

ஸ்மார்ட் போன்களை வாழ்வின் ஒரு அங்கமாகவே கொண்டுள்ள இன்றைய உலகில் பலரும் பாலியல் வீடியோக்களுக்கு அடிமைகளாக உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. சிறார் பாலியல் வீடியோக்கள் (Child Videos) பார்ப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனராம். இதனை பார்த்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ₹10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பதை மறவாதீர்கள். இம்மாதிரியான தேடுதல் போலீஸாரால் கண்காணிக்கப்படுவதையும் நினைவில் கொள்ளுங்கள்.
News February 7, 2026
ஜெ., பாணியில் ஜாதகத்தை கேட்கிறாரா விஜய்?

விருப்ப மனுவுடன் வேட்பாளர்களின் ஜாதகத்தையும் தவெக சேர்த்து வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் மூலம் அறிமுகமான பெங்களூரு ஜோசியர் மீது விஜய்க்கு பெருத்த நம்பிக்கை வந்துள்ளதால், அவரது அறிவுறுத்தலின்படி வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளாராம். 2009 தேர்தலில் வேட்பாளர்களின் ஜாதகத்தையும் ஜெ., கேட்டிருந்ததாக கூறப்படுவதால், அதே ஃபார்முலாவை விஜய் ஃபாலோ செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News February 7, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு <<19072951>>இந்தியா<<>> ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரம், இனி வெனிசுலாவிலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டுவர ஆகும் செலவு அதிகரிக்கும். இதனால், அதனை ஈடு செய்ய பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய FM நிர்மலா, நாட்டு மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் அரசு எடுக்காது என்று மட்டுமே பதிலளித்தார். உங்கள் கருத்து என்ன?


