News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 22, 2025
SA-ஐ எதிர்த்து களம் காணும் இந்திய படை இது தான்

IND vs SA மோதும் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. காயம் காரணமாக கில் வெளியேறிய நிலையில், பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அக்சர் படேலுக்கு பதிலாக நிதிஷ்குமார் அணியில் இடம்பெற்றுள்ளார். PLAYING X1: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், நிதிஷ்குமார், ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
News November 22, 2025
அணு குண்டாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது!

அணு ஆயுத தாக்குதல், சுனாமி பேரலைகள், புயல்களை தாக்குப்பிடிக்கும் வகையில் முதற்கட்டமாக செயற்கை தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. 78,000 டன் எடையில் மிதக்கும் வகையிலான இந்த தீவு, 2028-ல் செயல்பாட்டிற்கு வரும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 138 மீட்டர் நீளம், 85 மீட்டர் அகலம் கொண்ட இந்த தீவில், 238 மனிதர்கள் 4 மாதங்களுக்கு எந்த தேவையும் இல்லாமல் வசிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறதாம்.
News November 22, 2025
BREAKING: விஜய் புதிய முடிவு!

நாளை முதல் பரப்புரையை தொடங்கும் விஜய், மாவட்ட வாரியாக நலிவடைந்த பிரிவினரை அழைத்து சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ரோடு ஷோக்களுக்கு அனுமதி கிடைத்தாலும் உள் அரங்க சந்திப்புகளை தொடரவும் முடிவு எடுத்துள்ளாராம். 11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பிற்கான திட்டத்தை தவெக தயாரித்துள்ளதாகவும், இன்று மாலை அதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


