News April 23, 2025

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

image

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 7, 2026

திங்கள் முதல் தொடங்கும் செய்முறைத் தேர்வுகள்!

image

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.9 முதல் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 – 11 மணி, காலை 11.30 – மதியம் 1.30 மணி, மதியம் 2.30 – மாலை 4.30 மணி என 3 பிரிவுகளாக செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ALL THE BEST மாணவர்களே, கலக்குங்க!

News February 7, 2026

8 குழந்தைகள் உள்பட 24 பேரை கொன்ற கிளர்ச்சி படை!

image

சூடான் உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது RSF என்ற கிளர்ச்சி படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில், 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குழந்தைகளில் 2 பச்சிளம் குழந்தைகள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்துள்ள சூடான் டாக்டர்கள் குழு, மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச அமைப்புகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

News February 7, 2026

சிறிய அணியிடம் போராடி வென்ற பாகிஸ்தான்!

image

டி2O WC-ன் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நெதர்லாந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய பாக்., அணியில், ஃபர்ஹான்(47) மட்டுமே குறிப்பிடதக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரில் பஹீம் அஷ்ரஃப் 24 ரன்களை விளாசி ஆட்டத்தை பாக்., பக்கம் திருப்பினார்.

error: Content is protected !!