News April 23, 2025

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

image

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 19, 2026

லடாக்கில் நிலநடுக்கம்… குலுங்கிய கட்டிடங்கள்!

image

பிரபல சுற்றுலாத்தலமான லடாக்கில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்ட தகவலின்படி, லே மற்றும் லடாக் பகுதியில் 171 கிமீ ஆழத்தில் காலை 11.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் இதுவரை அங்கு பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

ஆட்சியில் விசிகவுக்கு பங்கு உள்ளது: சிந்தனைச்செல்வன்

image

கடந்த 75 ஆண்டுகளில் சாதிக்க முடியாதவற்றை 5 ஆண்டுகளில் விசிக சாதித்துள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் கூறியுள்ளார். பட்டியலின மக்களுக்கான பல சட்டத்திருத்தத்தை விசிக கொண்டு வர வைத்துள்ளது என்ற அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக நிறைவேற்றிய நிறைய திட்டங்கள் விசிகவின் கொள்கை அரசியலில் உள்ளது என்றார். அந்தவகையில், ஆட்சி அதிகாரத்தில் விசிகவின் பங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

₹200 கட்டினால் போதும் ₹75,000 கிடைக்கும்

image

மத்திய அரசின் ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு வெறும் ₹200 பிரீமியமாக கட்டினால், ₹75,000 வரை காப்பீடு கிடைக்கும். காப்பீடுதாரர் இயற்கை மரணமடைந்தால் ₹30,000, விபத்து காரணமாக உயிரிழந்தால் ₹75,000, Partial disability என்றால் ₹37,500, Fully disabled என்றால் ₹75,000 கிடைக்கும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. முழு விவரங்களை அறிய LIC-ஐ அனுகவும். SHARE.

error: Content is protected !!