News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 27, 2025
புதுச்சேரி: உதவித்தொகை உயர்வு அறிவிப்பு

புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித் திட்டம், ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் வழங்கப்படும். மேலும், கோதுமை போல் 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
News December 27, 2025
நயினாருக்கு குருநாதரான செங்கோட்டையன்

செங்கோட்டையன் போய் சேர்ந்திருக்கும் இடம் எப்படி என்று தனக்கு தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், 1977-ல் KAS முதல்முறையாக ஜெயித்தது முதல் ஜெ., உடனான பயணத் திட்டங்களின்போதும் தன்னுடனே பல ஆண்டுகள் நட்புடன் பயணித்தவர் என்றார். இந்நிலையில், தன் குருநாதருக்கு வணக்கங்கள் என நயினார் பேச்சை தொடங்கினார்.
News December 27, 2025
வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிடலாமா?

வாழைப்பழங்களில் மஞ்சள், பச்சையை விட செவ்வாழை ஆரோக்கியமானது. இதை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். முக்கியமாக *செரிமானத்தை மேம்படுத்தும் *இதய ஆரோக்கியத்திற்கு நல்லது *எடையை கட்டுக்குள் வைக்கும் *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *கண், சருமத்திற்கு நல்லது *உடலுக்கு ஆற்றலை வழங்கும் *மனசோர்வை குறைக்கும்.


