News March 23, 2024
29 கிலோ தங்கம் பறிமுதல்; பறக்கும் படையினர் அதிரடி

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பறக்கும் படையினர் முழுவீச்சில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை நகைக் கடைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் எனக் கூறப்படும் நிலையில், ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 11, 2026
உங்களுக்கும் இப்படி போன் வரலாம்.. உஷாரா இருங்க!

இந்தூரை சேர்ந்த ஸ்கூல் டீச்சரிடம், AI மூலம் அவரின் Cousin-ன் குரலில் பேசி ₹97,500-ஐ சிலர் சுருட்டியுள்ளனர். இருவரும் 2 ஆண்டுகளாக தொடர்பில் இல்லாதபோதும், அவசர மருத்துவ தேவை என்பதால், QR கோடு மூலம், இவரும் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், உடனே நம்பர் பிளாக் செய்யப்பட்டுள்ளது. பிறகு Cousin-னிடம் பேசிய போதுதான், ஏமாற்றப்பட்டதை டீச்சர் உணர்ந்துள்ளார். உங்களுக்கு இப்படி போன் வரலாம். கவனமா இருங்க!
News January 11, 2026
பொங்கல் பரிசால் உயிர் பறிபோனது

திருச்சி கருங்குளத்தை சேர்ந்த ஜெனிபருக்கும், அவரது கணவருக்கும் இடையே தமிழக அரசு அறிவித்த ₹3000 பொங்கல் பரிசுத் தொகையை யார் வாங்குவது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், மனமுடைந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 11, 2026
அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு அன்புமணிக்கு அதிகாரமில்லை என ECI-க்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக பெயரை அன்புமணி சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


