News March 23, 2024
29 கிலோ தங்கம் பறிமுதல்; பறக்கும் படையினர் அதிரடி

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பறக்கும் படையினர் முழுவீச்சில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை நகைக் கடைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் எனக் கூறப்படும் நிலையில், ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News October 24, 2025
NATIONAL ROUNDUP: டெல்லியில் செயற்கை மழை

*தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேரின் மனு தள்ளுபடி *இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக மணீஷ் சர்மா நியமனம் *காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் அக்.29 செயற்கை மழை பொழிய வைக்க திட்டம் *கல்வியின் மூலம் கேரளா வளர்ச்சியடைவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு *டெல்லியை தொடர்ந்து ஹரியானா பஞ்சாப்பில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தகவல்
News October 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.
News October 24, 2025
வரலாற்றில் இன்று

*1801 – சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டிய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
*1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி செபீல்டு, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது
*1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது
*1980 – நடிகை லைலா பிறந்த தினம்
*1994 – கொழும்பு தேர்தல் கூட்டத்தில், நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர்