News March 23, 2024

29 கிலோ தங்கம் பறிமுதல்; பறக்கும் படையினர் அதிரடி

image

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பறக்கும் படையினர் முழுவீச்சில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை நகைக் கடைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் எனக் கூறப்படும் நிலையில், ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 17, 2025

மன அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள்

image

மன அழுத்தத்தில் இருந்து நாம் விரைவாக வெளியில் வரவில்லை என்றால் அது தற்கொலை வரை செல்லும் அபாயம் உள்ளது. மேலும் அது உடல் ஆரோக்கியத்தையும் பலவீனமான நிலையையும் உண்டு செய்யலாம். மன அழுத்தம் இருப்பதை உணரும் போது உடனடியாக அதை குறைக்க தேவையான விசயங்கள் நாம் செய்ய வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமான உணவுகளின் மூலமாகவும் அதை குறைக்கலாம். அப்படியான உணவுகளின் லிஸ்ட்டை மேலே SWIPE செய்து பாருங்கள். SHARE IT

News November 17, 2025

கால்பந்து உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி தகுதி

image

2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதி சுற்​றில் போட்டியில் நேற்று போர்ச்சுகல் அணி அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி போர்ச்சுகல் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது. இதனால் 9 – 1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு அந்த அணி தகுதி பெற்றது. கடந்த போட்டியில் ரெட் கார்டு பெற்றதால் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்த போட்டில் பங்கேற்க முடியவில்லை.

News November 17, 2025

வரலாற்றில் இன்று

image

1920 – நடிகர் ஜெமினி கணேசன் பிறந்ததினம்
1928 – விடுதலை போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் மறைந்த தினம்
1972 – நடிகை ரோஜா செல்வமணி பிறந்த தினம்
1982 – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பிறந்தநாள்
1993 – நைஜீரியாவில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

error: Content is protected !!