News January 2, 2025

புதிதாக 25 பேரூராட்சிகள்

image

புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன. இதன்படி, முகாசி பிடாரியூர், கணியூர், அரசூர், பேரூர் செட்டிபாளையம், அத்திப்பட்டு, பாடியநல்லூர், விராலிமலை, காளையார்கோவில், ஏற்காடு, மணிவிழுந்தான், பாகலூர், பட்டணம், கூத்தப்பாடி, ராயக்கோட்டை, சூளகிரி, திருமயம், தேவிபட்டினம், ஏர்வாடி, தலைவாசல், புதியம்புத்தூர், இருங்களூர், நத்தக்காடையூர், கடம்பத்தூர், கொள்ளிடம், தோக்கவாடி. இதில் உங்க ஊர் இருக்கா?

Similar News

News September 18, 2025

முகம் பளிச்சிட இந்த தேநீரை குடிங்க!

image

ரோஜா இதழ்களை பறித்து, நன்கு உலர்த்தி கொள்ளவும் *உலர்ந்த இந்த ரோஜா இதழ்களை, கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும் *3- 5 நிமிடங்கள் வரை இந்த நீரை கொதிக்க வைத்துவிட்டு, இறக்கி வடிகட்டவும் *பிறகு இதில், தேயிலைத் தூளைச் சேர்க்கவும் *இதில் தேன் கலந்தால், சுவையான, ஹெல்தியான ரோஸ் டீ ரெடி. இதனை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.

News September 18, 2025

போதைப்பொருள் நாடுகள் பட்டியலில் இந்தியா: டிரம்ப்

image

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகள் போதைப்பொருள் உற்பத்தி மையங்களாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். போதைப்பொருள் மற்றும் அதற்கு தேவையான ரசாயனம் அதிகளவில் உற்பத்தி செய்வது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, ஹைட்டி, கொலம்பியா, பெரு, பனாமா, பொலிவியா மற்றும் பர்மா போன்ற நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளன.

News September 18, 2025

2 நாளில் 11 கொலைகள்

image

TN-ல் கடந்த 2 நாள்களில் மட்டும் 11 கொலைகள் அரங்கேறியுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மயிலாடுதுறை (ஆணவக்கொலை), திருப்பத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நெல்லை, விருதுநகர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 கொலைகள் நடந்துள்ளது. தென்மாவட்டங்களை தொடர்ந்து, தற்போது வட – மேற்கு மாவட்டங்களிலும் படுகொலைகள் அரங்கேற தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

error: Content is protected !!