News August 6, 2024
இரவோடு இரவாக 22 பேர் கைது

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர்கள், விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகம் அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள், மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் இலங்கை வசமுள்ளன.
Similar News
News January 15, 2026
பொங்கல் பணம்.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

₹3,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு நேற்று வரை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 7,80,764 பேர் பொங்கல் தொகுப்பை பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னையில் 95% பேர் மட்டுமே பொங்கல் தொகுப்பை வாங்கியுள்ளனர். பொங்கல் பரிசு தேர்தலில் எதிரொலிக்கும் என நினைத்திருந்த திமுகவுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 15, 2026
துர்கா ஸ்டாலினுடன் ஜாய் கிரிசில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான், தன் குழந்தையின் தந்தை என்பதை நிரூபிக்க கோர்ட் படியேறி ஜாய் கிரிசில்டா போராடி வருகிறார். முன்னதாக, CM ஸ்டாலினை அப்பா என குறிப்பிட்டு, எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள் எனக் கோரியிருந்தார். இந்நிலையில் CM ஸ்டாலினிடம் இருந்து இன்று ₹100 பொங்கல் படி பெற்றதாகவும், துர்கா அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
News January 15, 2026
சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.


