News August 24, 2025

பயங்கரவாத அமைப்பின் பிடியில் 215 பள்ளிகள்

image

ஜம்மு – காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் அறக்கட்டளைக்கு சொந்தமான 215 பள்ளிகளை அந்த யூனியன் பிரதேச அரசு கைப்பற்றியுள்ளது. இந்த பள்ளிகள் 10 மாவட்டங்களில் உள்ளதால், சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இதனை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 51,000 மாணவர்கள் பயின்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 24, 2025

வாக்குத் திருட்டு.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

image

எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்றால் ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம் என கேரள BJP துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக, வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் லோக் சபா தேர்தலில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அவர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News August 24, 2025

யூத அரசுக்கு எதிரான நவீன அவதூறு: இஸ்ரேல் தாக்கு

image

காசாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐ.நாவின் IPC அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது முழுக்க முழுக்க பொய் என்றும், யூத அரசுக்கு எதிரான நவீன ரத்தம் மிகுந்த அவதூறு என்றும் இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக கூறியுள்ளார். காசாவில் உள்ள ஒருவருக்கு ஒரு டன் வீதம் 2 மில்லியன் டன் உதவிப் பொருள்களை அனுமதித்துள்ளதாகவும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News August 24, 2025

பதவி பறிப்பு மசோதாவில் முதலில் PM இல்லை: ரிஜிஜு

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த மசோதாவுக்கான பரிந்துரையின்போது PM பதவி இடம்பெறவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். ஆனால், மோடி இதனை ஏற்க மறுத்ததாகவும், PM-ம் ஒரு குடிமகன், அவருக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு இருக்கக்கூடாது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதன்பிறகே இந்த மசோதாவில் PM பதவி சேர்க்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!