News April 25, 2025

TN-ல் 200 பாகிஸ்தானியர்கள்.. தீவிரமடையும் வெளியேற்றம்

image

குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 பேரில் பெரும்பாலானவர்கள் சென்னையில் தான் உள்ளனர். தொழில், மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 25, 2025

இந்தியாதான் டார்கெட்.. ஆப்பிள் எடுத்த முடிவு

image

2026 இறுதிக்குள் அமெரிக்காவிற்கு தேவையான அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிற்கு ஆண்டுக்கு 6 கோடி ஐபோன்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஐபோன் உற்பத்திக்கு சீனாவையே நம்பி இருப்பதை குறைக்கவும், சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதை கருத்தில் கொண்டும் இம்முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

News April 25, 2025

தாக்குதல் நடந்த இடத்தில் வீரர்கள் இல்லாதது ஏன்?

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு வீரர்கள் இல்லாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பைசரன் பள்ளத்தாக்கில் வழக்கமாக அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் போதுதான் பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை அங்கு அழைத்துச் சென்றதால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

News April 25, 2025

ஸ்பெசல் கிளாஸா? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

image

பள்ளிகளுக்கு ஜூன் 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுமுறையிலும் சில தனியார் பள்ளிகள் ஸ்பெசல் கிளாஸ் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெயில் கொளுத்தி வரும் நிலையிலும் ஸ்பெசல் கிளாஸா என மாணவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், விடுமுறையில் ஸ்பெசல் கிளாஸ் நடத்தக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!