News April 1, 2025
2 கோடி இன்சுரன்ஸ் போச்சே!! செட்டப் விபத்து…

டெல்லியில் மகன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி ₹2 கோடி இன்சுரன்ஸ் பணம் பெற முயன்ற தந்தை உட்பட 3 பேர் கைதாகினர். சதிஷ் குமார் என்பவர் பைக் விபத்தில் தனது மகனுக்கு காயம் ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் சில நாட்களிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து விபத்து நடைபெற்ற இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அது செட்டப் செய்யப்பட்ட விபத்து என தெரியவந்தது.
Similar News
News April 2, 2025
பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல்: இந்தியா 3ம் இடம்

பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. போர்ப்ஸின் பட்டியலில் 902 பெரும் கோடீஸ்வரர்களுடன் USA முதலிடத்தில் உள்ளது. 902 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.581 லட்சம் கோடி. இதையடுத்து, சீனா 450 பேருடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 205 பேருடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. 205 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.80.41 லட்சம் கோடி ஆகும்.
News April 2, 2025
லாலு ஹாஸ்பிடலில் அனுமதி

பிஹார் முன்னாள் CM லாலு பிரசாத் (76) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி செல்வதற்காக பாட்னா விமான நிலையத்திற்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடல்நிலை பாதிக்கப்படவே, அவர் உடனடியாக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.
News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.