News May 2, 2024
17 மாவட்டங்களில் காலி மது பாட்டில்கள் பெறப்படுகிறது

தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம் ஏற்காடு உள்பட 12 மாவட்டங்களில் இயற்கை சூழலை பாதுகாக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது சென்னை உள்பட 17 மாவட்டங்களில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறுவதாகவும் விரைவில் தமிழகம் முழுவதும் திட்டம் அமலாகும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 29, 2026
அரசியல் கட்சி தொடங்கும் அர்ஜித் சிங்?

பிரபல பாடகர் <<18977992>>அர்ஜித் சிங்<<>>, இனி படங்களில் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், தனது பூர்விகமான மேற்கு வங்கத்தில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யை போல சினிமா கரியரை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர்களின் லிஸ்ட்டில் அர்ஜித் சிங்கும் இணைவாரா?
News January 29, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

தேர்தலையொட்டி, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன் நிலுவை பட்டியலை TN அரசு தயார் செய்து வருகிறதாம். மேலும், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் நகைக்கடன் குறித்த தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கவுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் 2 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 29, 2026
₹1Cr கேட்டு விஜய்க்கு மானநஷ்ட நோட்டீஸ்

தவெகவில் இணைந்ததாகக் கூறி, தவறான தகவல் வெளியிடப்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர், விஜய் ஆகியோருக்கு பிரபல தொழிலதிபர் கண்ணன் மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது மகன் மட்டுமே தவெகவில் சேர்ந்ததாக கூறியுள்ள அவர், தவறான செய்தி வெளியிட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ள அவர், கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.


