News September 27, 2024
சொத்து விவரங்களை வெளியிட்ட 13% நீதிபதிகள்

இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 98 பேர் (13%) மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவர்களில் 80% பேர் கேரளா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 62 நீதிபதிகளில், 5 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை அறிவித்துள்ளனர். தங்கள் சொத்து விவரங்கள் பொதுநலனுக்கு உதவாது என சில நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
₹2.43 கோடியை வேண்டாம் என்று சொன்ன வீராங்கனை

ஓய்வு பெற்ற ஃபிரெஞ்சு டென்னிஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (32), தனது யூடியூப் சேனலில் டென்னிஸ் வீரர்களின் பேட்டிகளை வெளியிட்டு வருகிறார். அவரது சேனலுக்கு, சூதாட்ட நிறுவனம் ஒன்று ₹2.43 கோடி ஸ்பான்சர்ஷிப் செய்ய முன்வந்துள்ளது. ஆனால், அதை மறுத்து, பணத்தை விட தனது நோக்கம் மதிப்புமிக்கது என தெரிவித்துள்ளார். மேலும், டென்னிஸ் சார்ந்த ஆரோக்கியமான வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
News December 9, 2025
‘வந்தே மாதரம்’ இஸ்லாமுக்கு எதிரானது அல்ல: ராஜ்நாத் சிங்

‘வந்தே மாதரம்’ மற்றும் அப்பாடலை கொண்டுள்ள ‘ஆனந்த் மடம்’ நாவல், இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அல்ல என ராஜ்நாத் சித் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஆங்கிலேய அழுத்தத்தின் கீழ் அன்றைய வங்காள நவாப் மக்களை சுரண்டினார். மக்களின் வலியையே அந்த நாவல் பிரதிபலித்தது. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு அது அரசால் குறிவைக்கப்பட்டு, வந்தே மாதரத்தின் ஆன்மா நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
News December 9, 2025
பணக்காரர் வன்கொடுமை செய்தால் குற்றமற்றவரா?

<<18502901>>நடிகை பலாத்கார வழக்கில்<<>> கேரள அரசின் செயல்பாட்டை பாடகி சின்மயி வரவேற்றுள்ளார். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஜாமினில் வெளியேற்ற முயற்சிப்பதற்கு பதிலாக கேரள அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது பாராட்டத்தக்கது. ஒருவர் பணக்காரராக இருந்தால், தனக்கு பிடிக்காத பெண்ணை, அடியாட்களை அனுப்பி வன்கொடுமை செய்துவிட்டு, குற்றமற்றவர் என நீதி வாங்கி விட முடிவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.


