News March 28, 2024

அருணாச்சல் முதல்வரின் சொத்து 100% அதிகரிப்பு

image

அருணாச்சல் பிரதேச பாஜக முதல்வர் பெமா காண்டுவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 100% அதிகரித்துள்ளது. அருணாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அவர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதிலுள்ள பிரமாண பத்திரத்தில் ரூ.277 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த 2019 தேர்தலில் ரூ.132 கோடி சொத்து இருப்பதாக கூறியிருந்தார். அதனுடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகமாகும்.

Similar News

News February 5, 2026

PM மோடி உரை.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

image

ராஜ்யசபாவில் PM மோடி உரையின் போது முழக்கமிட்ட காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி MP-க்கள் வெளிநடப்பு செய்தனர். குடியரசு தலைவர் உரைக்கு மோடி பதிலளித்து வருகிறார். அப்போது, அவரை எதிர்த்து முழக்கமிட்ட கார்கேவிடம், இருக்கையில் அமர்ந்து முழக்கமிடுமாறு மோடி கோரிக்கை விடுத்தார். மேலும், மக்கள் நலனே பிரதானம் என பாஜக கருதுவதால்தான், 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று செயல்பட்டு வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

News February 5, 2026

சபாநாயகருக்கு பின்னால் மோடி ஒளிகிறார்: பிரியங்கா

image

3 பெண் MP-க்கள், PM இருக்கைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்ததால், அவைக்கு வர மோடிக்கு துணிச்சல் இல்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அவைக்கு வராமல் சபாநாயகருக்கு பின்னால் <<19058063>>PM மோடி<<>> ஒளிந்துகொள்கிறார், இது என்ன முட்டாள்தனம் என்றும், பாஜக அரசு விவாதம் நடத்தவே விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக சுதா, ஜோதிமணி உள்ளிட்டோர் PM-ஐ முற்றுகையிட இருந்ததாக ஓம்பிர்லா சூசகமாக கூறியிருந்தார்.

News February 5, 2026

ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்: ஐடி

image

மறைந்த CM ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட அவரது சொத்துக்கள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை சென்னை HC-ல் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. ₹13 கோடி வரி பாக்கி செலுத்தக் கூறி ஐடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜன.31 வரை வருமான வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து ₹9.17 கோடி உள்ளது.

error: Content is protected !!