News April 30, 2024

10 நக்சல்கள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாராயண்பூரில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பெண் நக்சல்கள் உள்ளிட்ட 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் சடலங்களின் அருகில் கிடந்த ஏராளமான ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.

Similar News

News March 11, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

image

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 11, 2026

நல்ல தூக்கம் வேணுமா… பாயில் படுங்க!

image

‘பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான கோரைப் பாயில் படுப்பது ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். கர்ப்பிணிகள் பாயில் உறங்கினால், முதுகு & இடுப்பு வலி வராது. மேலும், பாயில் சமமாகப் படுக்கும்போது உடலில் ரத்தம் சீராகப் பாய்கிறது. இத்துடன், கோரைப் பாய் சூட்டை உள்வாங்கும் தன்மை கொண்டதால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.

News March 11, 2026

BREAKING: எதிர்பாராத திருப்பம்.. புதிய கூட்டணி

image

TN அரசியலில் புதிய திருப்பமாக தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சசிகலா சந்தித்துள்ளார். 30 நிமிடங்களுக்கு மேலான இச்சந்திப்பில் தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுகிறது. முன்னதாக, TVK-வுடன் சசிகலா கூட்டணி பேச்சு நடத்தியதாக தகவல் கசிந்தது.

error: Content is protected !!