News March 17, 2024

குமரியில் ரூ.1 லட்சம் அபராதம்

image

கேரளாவிலிருந்து குமரிக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் இன்று(மார்ச் 16) அதிகாலை சிறை பிடித்து குழித்துறை நகராட்சியில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து வாகனத்தில் மருத்துவ மற்றும் மீன் கழிவுகள் இருப்பதை உறுதி செய்து ரூ.1,00,000 அபராதம் விதித்தனர். சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News December 7, 2025

குமரியில் அடிக்கடி மின்தடையா? கவலை வேண்டாம்..!

image

குமரி மக்களே.. மழை உள்ளிட்ட பல்வேறு சமயங்களில் நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே 9498794987 என்ற எண்ணுக்கு கால்செய்து உங்கள் ஏரியாவில் எங்கு மின்தடை என தெரியப்படுத்துங்க. உடனே மின்சாரத் துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க செய்வார்கள். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

image

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (டிச.7) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 43.29 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.24 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 11.55 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 11.64 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 568 கனஅடி, பெருஞ்சாணிக்கு 213 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News December 7, 2025

குமரியில் 42 பேர் மீது குண்டாஸ்

image

கடந்த மாதம் வில்லுக்குறியில் லாரி டிரைவரை கொலை செய்த வழக்கில் திருவிடைக்கோடு ரமேஷ் (26), விமல் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.ஸ்டாலின், ஆட்சியர் அழகுமீனாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, இருவரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த ஆண்டு 42 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக போலீசார் கூறினர். 

error: Content is protected !!