News March 17, 2024

குமரியில் ரூ.1 லட்சம் அபராதம்

image

கேரளாவிலிருந்து குமரிக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் இன்று(மார்ச் 16) அதிகாலை சிறை பிடித்து குழித்துறை நகராட்சியில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து வாகனத்தில் மருத்துவ மற்றும் மீன் கழிவுகள் இருப்பதை உறுதி செய்து ரூ.1,00,000 அபராதம் விதித்தனர். சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News December 4, 2025

வெள்ளிச்சந்தையில் 5 தேடப்படும் குற்றவாளிகள்

image

வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இதில் கிருஷ்ண பெருமாள் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அஜின்,சுபாஷ், சுமன், சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது வழக்கு உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படஉள்ளனர்.

News December 4, 2025

வெள்ளிச்சந்தையில் 5 தேடப்படும் குற்றவாளிகள்

image

வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இதில் கிருஷ்ண பெருமாள் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அஜின்,சுபாஷ், சுமன், சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது வழக்கு உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படஉள்ளனர்.

News December 3, 2025

குமரி: 250 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல்

image

கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் விஷச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரமேஷ் (45) ,கிருஷ்ணகுமார் ( 49) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!