News March 19, 2024
வேலூர்: மாட்டு வியாபாரியிடம் பணம் பறிமுதல்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 19) அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க வந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News February 14, 2026
வேலூர்: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
வேலூர்: கொலை வழக்கில் அதிரடி கைது!

வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ராமு (வயது 43), கட்டிட மேஸ்திரி. கடந்த 11-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் சாலமன் (26) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று (பிப்.13)போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 14, 2026
வேலூர்: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை

வேலூர் பொய்கை பகுதியை சேர்ந்த ரமேஷ்(38) தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு 17 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராதாகிருஷ்ணன் ரமேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 2 லட்சம் அபராதம் விதித்து நேற்று (பிப்.13) உத்தரவிட்டார்.


