News February 14, 2026
விழுப்புரத்தில் ரவுடி கொடூர கொலை!

விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தா.மெண்டல் கதிர் (எ) கதிரவன் இவர் மீது விழுப்புரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த பிப்.9 நள்ளிரவு விழுப்புரத்தில் ஒரு தேநீரகத்துக்கு சென்ற போது, மேகநாதன்,அன்பு இருவரும் தா.மெண்டல் கதிர் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த முயற்சி. மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையில் நேற்று (பிப்.13) உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை.
Similar News
News February 18, 2026
விழுப்புரத்தில் 250 கோழிகள் இலவசம்!

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
விழுப்புரம்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு விரைவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்கள் (துப்பாக்கிகள்) வைத்திருப்பவர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு இன்று (பிப்.18) காலை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 18, 2026
விழுப்புரம்: ஊரக வளர்ச்சி துறையில் 24 பேர் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில், இளநிலை பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் நிலையில் பணியாற்றி வரும் 24 பேர் மாவட்டத்திற்குள் கண்டமங்கலம், செஞ்சி, கோலியனூர், மரக்காணம், திண்டிவனம், மேல்மலையனூர், முகையூர் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் பிறப்பித்துள்ளார்.


