News March 19, 2024

விழுப்புரத்தில் மீண்டும் ரவிக்குமார் போட்டி

image

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போது அங்கு எம்பியாக உள்ள ரவிக்குமாரே மீண்டும் களம் காண்கிறார். கடந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் நின்ற அவர் இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.ஜ. கூட்டணியில் பாமக இங்கு களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 16, 2026

விழுப்புரத்தில் குடிநீரின்றி பறிதவிக்கும் மக்கள்!

image

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பூசாரிப்பாளையம் கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்பட்ட மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். ஆகையால், சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இதனை சீரமைத்து, குடி நீர் விநியோகம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News February 16, 2026

விழுப்புரம் அருகே அதிரடி கைது!

image

காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் தலைமையிலான போலீசார் கருங்காலிப்பட்டு, அழகம்மாகோவில் குளக்கரை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக 2 பைக்கில் சென்ற, 3 பேரை மறித்து விசாரித்தனர். இந்த சோதனையில், அவர்களிடம் 21 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, மாம்பழப்பட்டைச் சேர்ந்த கணேசன்(37), பூங்காவனம்(42), விநாயகம்(51) ஆகியோரை கைது செய்தனர்.

News February 16, 2026

விழுப்புரத்தில் வீட்டிற்கு தீ வைத்த வாலிபர்!

image

விழுப்புரம்: வானூர் வட்டம், பட்டானூர் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி.ஷீலா. இவர் குடும்பத்துடன் தனது வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஷீலாவின் வீட்டில் நேற்று(பிப்.15) தீ விபத்து ஏற்பட்டது. இதில், வஅலமாரியிலிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்ககள் சேதமடைந்தன. இந்நிலையில், வீட்டை பெட்ரோல் வைத்து எரித்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!