News January 3, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் வருவாய் கோட்டங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் வருவாய் கோட்டங்களான சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் சப் கலெக்டர் ஆர்டிஓ அலுவலகங்களில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News January 5, 2026

விருதுநகரில் ரூ.4.97 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் 1.1.2025 – 31.12.2025 வரை குற்றங்களை குறைக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் பதிவான 353 திருட்டு வழக்குகளில் 295 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3,10,74,278 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. இதே போல் பாரி குற்ற வழக்கில் பதிவான 48 வழக்குகளில் 46 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் ரூ.1,86,87,202 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

விருதுநகர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

image

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருச்சி மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 5, 2026

சிவகாசி: கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி ஊழியர் மீது வழக்கு

image

சிவகாசி உள்ள தனியார் ஓட்டலின் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வந்த சிவகாசி பள்ளப்பட்டி சேனையாபுரம் காலனியை சேர்ந்த ஐ.டி ஊழியர் சண்முகவேல் (வயது 24)ஏற்கனவே மதுபோதையில் இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவரை ஓட்டல் மேலாளர் காசிராஜன் (34) மதுகூடத்துக்கு செல்ல அனுமதிக்காததால் தகராறு செய்த சண்முகவேல் மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சண்முகவேல் மீது வழக்குப்பதிவு.

error: Content is protected !!