News January 22, 2026
ராணிப்பேட்டை: தந்தைக்கு எமனான மகன்!

சோளிங்கர் அருகே ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (70). இவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இதில், மூத்த மகன் செல்வம் (40) தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு நேற்று (ஜன.21) கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், செல்வம் தந்தையை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதில் நரசிம்மன் இறந்தார். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.
Similar News
News January 31, 2026
9 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஜனவரி 31ம் தேதி 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை எஸ்பி அய்மன் ஜமால் பிறப்பித்துள்ளார். உத்தரவில் ராணிப்பேட்டை ஸ்டேஷனில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் அரக்கோணம் தாலுகாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கலவையில் பணியாற்றி வந்த அமரேசன் அரக்கோணம் டவுனுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று 9 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
News January 31, 2026
ராணிப்பேட்டை காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமாகவும் பணி செய்து வருகின்றனர்.
News January 31, 2026
ராணிப்பேட்டை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


