News February 3, 2026
ராணிப்பேட்டை: ஊர் ஊராய் திருட்டு; கடைசியில் ட்விஸ்ட்!

அரக்கோணத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில் சந்தேகத்திற்கு இடமான 2 வாலிபர்களை விசாரித்தனர். இதில் வேலூரை சேர்ந்த பரமேஸ்வரன் (28) மற்றும் கார்த்திக் (37) பல நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலையில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டதும், வாகனங்களை ரூ.5,000- 10,000-த்துக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது பற்றிய CCTV காட்சிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
ராணிப்பேட்டை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்!
News February 3, 2026
ராணிப்பேட்டை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT.
News February 3, 2026
BREAKING: ராணிப்பேட்டையில் பயங்கர விபத்து; 28 பேர் படுகாயம்!

சோளிங்கரில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பெருங்காஞ்சி ஏறி அருகே எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஓட்டுனர்கள் மற்றும் 26 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்த தொண்டபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


