News January 30, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 21, 2026
ராணிப்பேட்டை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட பழங்குடியின, தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை கேபின் குழு பணியாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வயது வரம்பு 18 முதல் 35. பயிற்சி காலம் 3 மாதம். திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி தரப்படுகிறது. தங்கும் விடுதி, உணவு செலவினத்தை தாட்கோ வழங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம், என ஆட்சியர் சந்திரகலா இன்று பிப்ரவரி.20ம் தேதி தெரிவித்துள்ளார்.
News February 21, 2026
ராணிப்பேட்டை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்கள் மற்றும் வினியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம், வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி மாலை 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து குறைகள் களைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்து பயன் பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News February 21, 2026
ராணிப்பேட்டை: ரூ.1கோடி மதிப்பிலான வெள்ளி கொள்ளை!

வாணியம்பாடியில் நகை வியாபாரிகளிடம் கத்திமுனையில் வெள்ளி நகைகளைப் பறித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் ஆம்பூர்பேட்டை நகைக்கடை உரிமையாளர்களின் மகன்கள் அமுல், நரசிம்மன் மற்றும் அவர்களது நண்பர்கள் மணி, பாபு ஆகியோர் அடங்குவர். கைதானவர்களிடமிருந்து 38.5 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


