News January 22, 2026
ராணிப்பேட்டையில் ரோட்டில் கிடந்த வாலிபர் உடல்!

பெரும்புலிப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.22) பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கத்தை சேர்ந்த தியாகராசு என்பது தெரிய வந்தது. மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற ஜன30ஆம் தேதி காலை 11:00 மணி அளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதை மாவட்ட கலெக்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், பல்வேறு துறை அலுவலர்கள் விவசாயிகள், விவசாய சங்கத்தினரின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். ஆகையால், மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தவறாது இதில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News January 28, 2026
அரக்கோணத்தில் சாலை விபத்து!

ராணிப்பேட்டை: அரக்கோணம், சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வாலிபர் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். காயமடைந்த அவரை அன்னை தெரசா அறக்கட்டளையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 28, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


