News February 6, 2026
ராணிப்பேட்டையில் தூக்கி வீசப்பட்டு பலி!

ஆற்காடு, நக்கீரன் தெருவை சேர்ந்தவர் தரணிபாய் (78). இவர், நேற்று (பிப்.5) காலை ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற வேன் திடீரென தரணிபாய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தரணிபாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
ராணிப்பேட்டையில் செல்லும் வழியில் பிரசவம்!

வாலாஜாவை அடுத்த ஆயிலத்தை சேர்ந்த தம்பதி லாரன்ஸ்- இந்திராணி (22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று அதிகாலை (பிப்.7) திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே 3: 30 மணிக்கு இந்திராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 8, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


