News April 6, 2026
மனைவியை கொன்று சடலத்துடன் படுத்த கணவன்

மனைவியை கொன்று அவரது சடலத்துடன் 2 நாள்கள் கணவன் தூங்கிய சம்பவம் ம.பி.,யை அதிர வைத்துள்ளது. மனைவி ரிமா பாய் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி கணவன் ஜெகதீஷ் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். மனைவி உடலை ஒரு அறையில் வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் அதே அறையில் 2 நாள்கள் ஜெகதீஷ் தூங்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
குபேர சம்பத்தை பெற உதவும் வழிபாடு

காலையில் எழுந்து குளித்து, ஏதாவது ஒரு இனிப்பை செய்யுங்கள். அத்துடன் ₹1 நாணயமும் வைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, இடது கையால், வலது கையை மூடுங்கள். நெஞ்சுக்குழி அருகே கைகளை வைத்து, ‘ஓம் கும் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அடுத்த நாள், ₹1 கோயில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். அதே போல, இனிப்பை வடக்கு திசை பார்த்தவாறு வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும். SHARE.
News April 20, 2026
நாமக்கல் அருகே இளைஞர் பரிதாப பலி!

எலச்சிபாளையம் அருகே சாமிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் எலச்சிபாளையம் அடுத்த மோர்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 20, 2026
ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


