News April 24, 2025

மதுரையில் ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் சீரமைப்பு

image

மதுரை கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளுக்காக பந்தல்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டை நிறுத்தி சில பகுதிகள் அகற்றப்பட்டன. இதனால் பந்தல்குடி கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேம்பாலப் பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.1 கோடியில் மீண்டும் சீரமைக்கப்படவுள்ளது.

Similar News

News February 1, 2026

மதுரை: பஸ் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி

image

மதுரை உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் மாதேஷ் (16) மற்றும் அம்பட்டையம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜகோபால் (19) ஆகியோர் நேற்று (ஜன.31) உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.

News February 1, 2026

மதுரை: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News February 1, 2026

மதுரை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவருக்கு ஆயுள்

image

மதுரை, தத்தனேரியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவர் 2017ம் ஆண்டு தனது உறவினர் மகளான சிறுமியை (17), கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தது.

error: Content is protected !!