News February 24, 2026
மக்கள் குறைதீா் கூட்டம்: 1,339 மனுக்கள அளிப்பு

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று (பி-23) நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,339 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதற்கு விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை போன்ற மனுக்கள் மீது உரிய தீா்வு காண துறை சாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
Similar News
News February 24, 2026
காக்குப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட காக்குப்பத்தில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (பிப்.24) நேரில் சென்று பார்வையிட்டார். உடன் விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர். வசந்தி, நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி உட்பட பலர் உள்ளனர்.
News February 24, 2026
விழுப்புரம்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

விழுப்புரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <
News February 24, 2026
ரயில் சேவையில் மாற்றம் – பராமரிப்பு பணிகள் காரணம்

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, திருப்பதி–காட்பாடி வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்.27 முதல் ஏப்ரல் 13 வரை சில நாட்களில் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும் விழுப்புரம்–திருப்பதி இன்டர்சிட்டி ரயில்கள் காட்பாடி–திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும்.


