News February 15, 2026
மகா சிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை!

மகா சிவராத்திரி நாளை மாலை 5:04க்கு தொடங்கி, பிப்ரவரி 16 அன்று மாலை 5:34க்கு முடிவடைகிறது. இந்த நாள்களில் எப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? நாளை காலை & மாலை தவறாமல் மீண்டும் நீராட வேண்டும். *நாளை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கண்விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். *இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள் இரவு 11:30 – 1 மணி வரை கண்விழித்து வழிபாடு செய்தாலே பலன் கிடைக்கும்.
Similar News
News February 20, 2026
ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு.. ஒரேநாளில் மாறிய அரசியல்

சட்டப்பேரவை நிகழ்வுகளை முடித்துவிட்டு வெளியே வரும்போது CM ஸ்டாலினை OPS சந்தித்துள்ளார். பேரவை நிகழ்வுகளுக்கே அதிமுகவினர் வராதபோது, OPS மட்டும் CM-க்கு தனிப்பட்ட முறையில் பூங்கொத்து கொடுத்து, சுமார் 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது சாதாரண சந்திப்பா அல்லது OPS-ன் அடுத்த அரசியல் நகர்வா என அரசியல் வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
News February 20, 2026
EPS-க்கு நன்றி தெரிவித்த CM ஸ்டாலின்

குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்ததற்காக EPS-க்கு நன்றி என CM ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதிநாளில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் தனக்கும், தனது மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு மட்டுமே உழைத்தேன் என்றார். மேலும், அடுத்த 2 மாதங்களில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனவும், மக்களுக்காக பல திட்டங்களை விரைந்து செயல்படுத்துவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
தவெக கூட்டணியில் சேர தடை வருகிறது: செங்கோட்டையன்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்பது அவர்களது விருப்பம். எங்கிருந்தாலும் வாழ்க என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், தவெக கூட்டணியை பொறுத்தவரை விஜய் தான் முடிவு செய்வார் என்றும், தவெக கூட்டணிக்கு வரும் கட்சிகளின் பெயரை வெளிப்படையாக சொல்ல முடியாது, அப்படி சொன்னால் அக்கட்சி கூட்டணியில் சேர்வதற்கு தடை வருகிறது எனவும் கூறியுள்ளார்.


