News January 11, 2026

பொங்கல் பணம்.. புதிய சர்ச்சை வெடித்தது

image

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பரிசு பணம் அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு ₹3000 எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதனால், ₹6,800 கோடியை அரசு இழப்பதாக கூறிய அவர், ஏற்கனவே மாநிலத்துக்கு ₹10 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர். இந்தத் தொகை இருந்தால், இந்தியாவை உலகிலேயே தலைசிறந்த நாடாக என்னால் மாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 22, 2026

அரிசி ரேஷன் கார்டுக்கு மாற வேண்டுமா?

image

பொங்கல் பரிசாக தமிழக அரசு ₹3,000 வழங்கிய நிலையில், அதை அரிசி அட்டை இல்லாதவர்கள் பெறமுடியாமல் போனது. இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் எழுப்பப்பட கேள்விக்கு அமைச்சர் சக்ரபாணி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். தகுதியுள்ளவர்கள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், துறை சார்ந்த அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

News January 22, 2026

வைத்திலிங்கம் அதிர்ச்சி.. அதிமுகவில் மீண்டும் சேர்ந்தனர்

image

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவரின் தீவிர விசுவாசிகளாகவும், OPS ஆதரவாளர்களாகவும் இருந்த தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று EPS-ஐ நேரில் சந்தித்து மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். விரைவில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிட்ட வைத்திலிங்கத்திற்கு, இது அதிர்ச்சி அளித்துள்ளது.

News January 22, 2026

உடனே செய்யுங்க: அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக <<18921270>>சுகாதாரத்துறை <<>>எச்சரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், எலிசா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், ஹாஸ்பிடல்களில் பிரத்யேக வார்டுகளை அமைக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!