News February 9, 2026
பூந்தமல்லியில் 15 சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர்: பூந்தமல்லி மகாலட்சுமி நகரில் தாயுடன் வசித்து வந்த 15 வயது சிறுமி, நேற்று(பிப்.8) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த போலீசார் விசரணையில், சிறுமியின் பெற்றோர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தாயுடன் வசித்து வந்த சிறுமி வீட்டிற்கு தாமதமாக வருவதை தாயார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிய வந்தது.
Similar News
News February 16, 2026
திருவள்ளூரில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
News February 16, 2026
திருவள்ளூர்; உடல் நசுங்கி கொடூர பலி!

அரக்கோணம் அருகே உள்ள வின்டர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(30). இவர், இன்று(பிப்.16) காலை தன்னுடைய பைக்கில் திருவள்ளூருக்கு செல்வதற்காக பவுண்டரிகபுரம் அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 16, 2026
JUST IN: திருவள்ளூரில் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

திருவள்ளூர் மாவட்டத்தில் நசரேத்பேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம், முகப்பேர் ஆகிய பகுதிகளில் 10 டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கேட்டு விற்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.


