News July 8, 2024

புதுவை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

புதுவை காவல்துறை, காவல் துறையினரின் தொழில்முறைத் தரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, இந்நிலையில் புதுவை பல்கலைக்கழகத்துடன் இன்று புதுவையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுவை காவல்துறை சார்பில் காவல்துறை இயக்குநர் டாக்டர் பி. ஸ்ரீனிவாஸ் ஐபிஎஸ் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ரஜ்னீஷ் பூட்டானி ஆகியோர் கையொப்பமிட்டார்.

Similar News

News February 13, 2026

காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மத்திய அமைச்சர் அமித்ஷா, வருகிற 14ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வருகை தர உள்ள வரிச்சிக்குடி பாலிடெக்னிக்கில் உள்ள எலிபேட் மைதானத்தை, மாவட்ட ஆட்சியர் இஷிட்டா ரதி, சார்பு ஆட்சியர் பூஜா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி சவுஜன்யா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள்.

News February 12, 2026

காரைக்கால்: புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

image

காரைக்கால் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இஷிதா ரதி ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், முன்னாள் ஆட்சியரிடமிருந்து பொறுப்புகளைப் பெற்றார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விளக்கங்கள் பெற்றார். மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி பணிகள் முன்னுரிமையாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

News February 12, 2026

புதுச்சேரி: பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்

image

புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 2016ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் 71 செயல்விளக்க உதவியாளர்களுக்கு, (Demonstration Assistant) பணி நிரந்தர ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் வழங்கினார். இதில் வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

error: Content is protected !!