News February 20, 2026

புதுவையில் அழகுக்கலை பெண் நிபுணர் மாயம்!

image

முதலியார்பேட்டையைச் சேர்ந்த சசி என்ற அழகுக்கலை பெண் நிபுணர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசி நடத்தி வந்த அழகு நிலையத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், அவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. சசி மாயமானதை அடுத்து, அவரது கணவர் ஏழுமலை முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 20, 2026

புதுவை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News February 20, 2026

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

புதுவை: மாரடைப்பால் உயிரிழந்த கூட்டுறவு வங்கி ஊழியர்

image

புதுச்சேரியில் இருந்து அண்மையில் ஏனாமிற்கு மாற்றலாகிய கூட்டுறவு வங்கியின் உதவியாளர் கார்த்திகேயன் (52) என்பவர் தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இவர் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!