News April 24, 2024

பக்தர்கள் செல்ல தடை

image

சேலம் மாவட்டம், கஞ்சமலை மேல் சித்தர் கோயில் கஞ்சமலை கோயிலுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியில் பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மர்ம நபர்கள் மலை உச்சியில் தீ வைத்ததால் தீ பரவி வருவதையொட்டி பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

Similar News

News August 23, 2025

BREAKING: ரேபிஸ் நோய்க்கு சேலத்தில் இருவர் பலி!

image

சேலம்: ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த தர்மன் (35). இவருடைய வீட்டில் வளர்த்து வந்த நாய் இவரை கடித்துள்ளது. இதனை அடுத்து முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இன்று உயிரிழந்தார். ரேபீஸ் நோய் தாக்கியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன் ரேபீஸ் நோய் தாக்கி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 23, 2025

சேலத்தில் நடிகர் கட்டியுள்ள கோயில் எங்கு தெரியுமா?

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சரவணன் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கோயில் கட்டி இருக்கிறார். வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த கோயிலின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வருகிற 27.08.2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அதே நாளில் படப்பிடிப்பு தளம், ஒரு ஸ்டுடியோவையும் தொடங்கவுள்ளர். இதனை இயக்குநர் பாண்டிராஜ் ஆக. 27-ம் தேதி இதை திறந்து வைக்கிறார்.

News August 23, 2025

சேலம்: 1,823 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி!

image

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஆகஸ்ட் 27- ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,823 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மாநகர் பகுதிகளில் மட்டும் 865 இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!