News December 11, 2025

நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் துவக்கம்

image

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலையில் 10, 12 ம் வகுப்புகளுக்கும் பிற்பகலில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடைபெற்றது. 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 15ஆம் தேதி தொடங்குகிறது.

Similar News

News March 9, 2026

திருநெல்வேலி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

திருநெல்வேலி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 9, 2026

நாங்குநேரியில் பாதிக்கப்பட்டவருக்கு திமுகவினர் ஆறுதல்

image

நாங்குநேரியில் 9 பேர் கும்பல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் சசிகுமார் வீட்டிற்கு திமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

News March 9, 2026

திருநெல்வேலி: பண மோசடியில் பெண் கைது

image

ராதாபுரத்தை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் சுய உதவிக் குழுவை நடத்தி தலைவியாக செயல்பட்டார். சக பெண்களின் பெயரில் வங்கியில் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி அதனை பெண்களுக்கு பிரித்து கொடுத்து அதற்கான மாதத் தவணையை தவறாமல் வசூல் செய்து வந்துள்ளார். ஆனால் வங்கியில் பணத்தை செலுத்தவில்லை. இது குறித்து பணகுடி போலீசில் பெண்கள் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ராஜம்மாளை கைது செய்தனர்.

error: Content is protected !!