News February 24, 2026
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தர உள்ளார். இந்நிலையில் முதல்வரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 24, 2026
நெல்லை: பேருந்து மோதியதில் பள்ளி மாணவி பலி

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை மது போதையில் பேருந்து இயக்கிய ஓட்டுனர் எதிரே வந்த பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் பலத்தை காயமடைந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வ பாலா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News February 24, 2026
நெல்லை: பேருந்து மோதியதில் பள்ளி மாணவி பலி

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை மது போதையில் பேருந்து இயக்கிய ஓட்டுனர் எதிரே வந்த பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் பலத்தை காயமடைந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வ பாலா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News February 24, 2026
திருநெல்வேலி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க


