News March 27, 2026
நெல்லியாளம்: வனவிலங்கு தாக்கி மாடு உயிரிழப்பு

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 3, 2026
நீலகிரி: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

நீலகிரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <
News April 3, 2026
மத்திய அமைச்சரின் நீலகிரி வழக்கு ரத்து!

2024 மக்களவை தேர்தலின் போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட அமைச்சர் எல்.முருகன் மீது அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் பதியப்பட்டன. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
News April 3, 2026
கூடலூர் சோதனை சாவடியில் ரூ. 22.82 லட்சம் பறிமுதல்

கூடலூர்-கர்நாடக எல்லையில் உள்ள கக்கன்நல்லா சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் நோக்கி சென்ற காரிலிருந்து ரூ. 22.82 லட்சம் ரொக்க பணம் கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.


