News October 4, 2025
நாமக்கல்: திருமண தடை நீங்க இங்க போங்க!

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இங்கு திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். SHARE பண்ணுங்க!
Similar News
News April 8, 2026
நாமக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் மீது குண்டாஸ்

குமாரபாளையம் அருகே 7 வயது சிறுமி கடந்த மார்ச் 7ஆம் தேதி இரவு காணாமல் போய், பின்னர் வீட்டிற்கு திரும்பினார். உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர் குமாரபாளையம் GHக்கு கொண்டு சென்றபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மணிகண்டன் (26) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
News April 8, 2026
நாமக்கல்லுக்கு மழை எச்சரிக்கை!

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில், மாவட்டத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் ஈரப்பதம், 35 – 75% தென்மேற்கு வரை இருக்கும். தெற்கு, தென்கிழக்கு திசையில் மற்றும் இருந்து மணிக்கு 2 கிமீ, வேகத்தில் காற்று வீசக் கூடும். இன்று 6 மி.மீ, நாளை 6 மி.மீ, 10ல் 5 மி.மீ, 11ல் 3 மி.மீ, மழை பெய்ய வாய்ப்புள்ளது.
News April 8, 2026
இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்தான விவரம்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது மக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


