News November 25, 2025
தென் மண்டலத்தில் 12 இன்ஸ்பெக்டர்கள் இடம் மாற்றம்

மதுரை உட்பட 10 தென்மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த ராமலட்சுமி, சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட 12 பேர் மதுரை, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News April 3, 2026
மதுரை: அரசு பஸ் – கார் மோதிய விபத்தில் சிக்கியவர் பலி.!

சோழவந்தான் அருகே கடந்த வாரம் அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சீனிவாசன் (52) என்பவர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சோழவந்தான் போலீசார், சீனிவாசன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 3, 2026
மதுரை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்.!

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் சுபாஷ்(23). இவர் பிளஸ் டூ வரை படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். வேறு வேலைக்கு முயற்சி செய்ததால் பார்த்த வேலைக்கு செல்லவில்லை. ஆனால் எதிர்பார்த்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 3, 2026
மதுரை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்.!

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் சுபாஷ்(23). இவர் பிளஸ் டூ வரை படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். வேறு வேலைக்கு முயற்சி செய்ததால் பார்த்த வேலைக்கு செல்லவில்லை. ஆனால் எதிர்பார்த்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


