News October 26, 2024

தீபாவளி பண்டிகை: குமரியில் களமிறங்கும் 1,000 போலீஸ்!

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அளவுக்கதிகமாக காணப்படும். இந்நிலையில், மக்கள் பாதுகாப்பை கருதி மாவட்டத்தில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேற்று(அக்.,25) தெரிவித்துள்ளார்.

Similar News

News February 16, 2026

கன்னியாகுமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

image

கன்னியாகுமரி மக்களே, தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News February 16, 2026

குமரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.

News February 16, 2026

குமரி: ஆபாச வீடியோ கால் பேசிய காவலர்; SP அதிரடி உத்தரவு

image

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஏட்டு ஒருவர், புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகி, நாளடைவில் வீடியோ காலில் இருவரும் பலமுறை ஆபாசமாக பேசியுள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்த விசாரணையில், சம்பந்தப்பட்ட காவலரை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றி SP ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!