News January 6, 2026
தீபத்தூண் வழக்கில் TN அரசு மேல்முறையீடு செய்யும்: ரகுபதி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டு காலத்தில் அது தீபத்தூண் என்பதற்கோ, அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை என்றவர், ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைபடுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் தீபமேற்ற கோர்ட் அனுமதித்தது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் என்று அவர் விமர்சித்துள்ளார்
Similar News
News January 29, 2026
TET தேர்வர்களுக்கு குட் நியூஸ்

டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. BC, BC-Muslim, MBC, DNC, மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு 55% ஆக இருந்த டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை 50% ஆக குறைத்து அரசு அறிவித்துள்ளது. மேலும், SC, ST வகுப்பினருக்கு 40% ஆகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு, நவம்பரில் நடந்த டெட் தேர்வுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 29, 2026
வீட்டுப் பத்திரம் தொலைந்து விட்டதா?

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் பதற வேண்டாம். நகலை பெற முதலில் FIR பதிவு செய்ய வேண்டும்*ஆங்கிலம், பிராந்திய மொழி நாளிதழ்களில் விளம்பரம் கொடுங்கள் *பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் விபரங்கள், FIR நகல், செய்தித்தாள் விளம்பர நகலை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்க வேண்டும் *நகல் பெறுவதற்கான கட்டணத்தை அலுவலகத்தில் Deposit செய்ய வேண்டும்.
News January 29, 2026
தைப்பூசம் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தைப்பூசம், வார விடுமுறை நாள்களையொட்டி, நாளை, நாளை மறுநாள், பிப்.1-ம் தேதி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து 1,205 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முருகன் கோயில்களுக்கு மக்கள் நெரிசலின்றி செல்ல ஏதுவாக கூடுதல் பஸ்களை தமிழக அரசு இயக்குகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். <


