News February 23, 2026
திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் திருக்கோயிலுக்கு பாரம்பரிய உடையை அணிந்து வர வேண்டும். கைலி, அரைக்கால் டவுசர் போன்ற ஆடைகள் கோயிலுக்குள் அணிந்து வர அனுமதி கிடையாது. இது, மாலை போட்டு வருபவர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News February 27, 2026
இராமநாதபுரம்: வாக்காளர்கள் கவனத்திற்கு…

இராமநாதபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 27, 2026
பரமக்குடியில் ஆண் சடலம் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, போகலூரை சேர்ந்த கருப்பையா (70) வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடிய நிலையில், கிழக்கு கடற்கரை சாலை அரிசி குடோன் அருகே அவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலறிந்து கேணிக்கரை போலீஸ் நிலையம் போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறப்பு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 27, 2026
பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் சிலை

பரமக்குடி அருகே உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் சொந்த ஊரான செல்லூரில் திருவுருவச் சிலை வைப்பது தொடர்பாக முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர், வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணன் ஆலோசனையின்படி, மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர், டாக்டர்.திலீப் ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாடு தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தலைவர் பாலா, மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.


