News February 18, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News February 19, 2026
திருவள்ளூரில் இலவச திறன் பயிற்சி!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, NTPC நிறுவனத்தின் CSR நிதியுதவியுடன் Assistant Machine Operator பயிற்சி வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 மாத பயிற்சிக்காலத்தில் தங்குமிடம், உணவு, மாதம் ரூ.2000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940188582, 7598145203, 9841126297 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News February 19, 2026
திருவள்ளூர்: தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்ரான், ஸ்ரீதேவி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.18), குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News February 19, 2026
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம். தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட நுண்கலை மற்றும் நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் கலை விருதை வருகிற பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-27269148 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார்.


