News February 27, 2026
திருமணம் முடிந்த உடன் விஜய்-ரஷ்மிகா செய்த முதல் வேலை

புதுமணத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா PM மோடியை சந்தித்துள்ளனர். இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளுமாறு PM மோடி & அமித்ஷாவுக்கு அவர்கள் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். முன்னதாக உதய்பூரில் நடந்த இவர்களின் திருமணத்திற்கும் PM அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 28, 2026
நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்: மோடி

மத்திய அரசின் 2026-27 பட்ஜெட் அறிவிப்புகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். வேகம், வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்த AI தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை விரிவாக பயன்படுத்தவும், தனியாா் துறை அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல சரியான நேரம் என்றும் குறிப்பிட்டாா்.
News February 28, 2026
இந்தியாவுக்கு மேலும் 8 சிவிங்கிப் புலிகள்

போட்ஸ்வானாவில் இருந்து மேலும் 8 சிவிங்கிப் புலிகள் (6 ஆண், 2 பெண்) இன்று இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்த சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் ஒரு மாதத்திற்கு கூண்டில் பராமரிக்கப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் விடப்படும். புதிய வருகையால் நாட்டில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 20 சிவிங்கிப் புலிகள் மூலம் இந்தியாவில் 28 குட்டிகள் பிறந்தன.
News February 28, 2026
பாஜக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: கெஜ்ரிவால்

போதிய ஆதாரங்கள் இல்லாததால் <<19251448>>மதுபான ஊழல்<<>> வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்போது டெல்லியில் தேர்தல் நடத்த மோடி மற்றும் பாஜகவுக்கு தைரியம் உள்ளதா
என சவால் விடுத்துள்ளார். மேலும், பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் அரசியலில் இருந்தே வெளியேறிவிடுகிறேன் என அவர் கூறியுள்ளார்.


