News February 23, 2026
திருத்தணியில் 2 வாலிபர்கள் பரிதாப பலி!

திருத்தணி: பொன்பாடி சோதனைச்சாவடி அருகே, நேற்று தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த விஜய் (22), யுவகேஷ் (22) ஆகியோர் வந்த பைக், பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில், பைக்கில் பயணித்த இரு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
Similar News
News February 27, 2026
திருவள்ளூர்: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

திருவள்ளூர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News February 27, 2026
ஆவடி நாசர் வீடு வீடாக பரப்புரை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை இன்று (பிப்.26) மாலை 8:30 மணி, நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்று வீடு வீடாக சென்று பரப்புரை செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News February 27, 2026
திருத்தணியில் அதிரடி கைது!

மும்பையில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செல்லும் ரயில்களில் போதை மாத்திரைகள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், நேற்று(பிப்.26) மாலை திருத்தணி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 4 பேரை சோதனை செய்ததில், அவர்கள் போதை மாத்திரைகள் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, அப்துல்ரஹீம்(24), சையது யாசின்(30), ரப்புதின்(19), சதீஷ்குமார்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


