News February 10, 2026

திருச்சி: பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலக ஓ.எஸ்.சி திட்டத்தின் கீழ் பணிபுரிய, பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 3 வருடம் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக பணி புரிந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், திருச்சி – 01, என்ற முகவரியில் வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 15, 2026

திருச்சி: திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வரிசைப் பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே பிஆர்ஓ வினோத் தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

திருச்சி: திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வரிசைப் பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே பிஆர்ஓ வினோத் தெரிவித்துள்ளார்.

News February 14, 2026

திருச்சி: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

image

திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை திருடப்பட்டது. இன்று அதிகாலை தாயுடன் இருந்த ஆண் குழந்தையை மருத்துவமனை ஊழியர் உடையிலிருந்த பெண்மணி குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கொண்டு செல்வது போல ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை அரசு மருத்துவமனை போலீசார் துறையூர் அருகே கைது செய்து, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக அரசு மருத்துவமனை விரைந்தனர்.

error: Content is protected !!