News November 19, 2025
திருச்சி: பஸ் ஸ்டாண்டில் லாரி மோதி விபத்து

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, மஞ்சள் திடல் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை மீது, துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி நிழற்குடைகுள் புகுந்த போது, அங்கு அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் அஜாக்கிரதையாக செல்போன் பேசியபடி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 17, 2026
திருவெறும்பூர்: ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த எம்பி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் பலகை மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் செயல்படாமல் உள்ளது, இதனை சீரமைக்க வேண்டும் என, துரை வைகோ எம்பி, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை எடுத்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரயில் நிலையத்தில் தகவல் பலகை மற்றும் ஒலி பெருக்கி சாதனங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகத்திற்கு துரை வைகோ எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
சட்ட சபை தேர்தல்: திருச்சியில் 14 ஆயிரம் அலுவலர்கள் ரெடி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகள் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 தொகுதிகளிலும் தேர்தல் பணியில் 14 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் துறைவாரியாக தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
News March 17, 2026
2026 தேர்தல்: திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் 14,000 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க, இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள, C-VIGIL APP மற்றும் SUVIDHA செயலியில் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.


