News January 25, 2026

திருச்சி: கொலை வழக்கில் 4 பேர் கைது

image

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19-ம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

Similar News

News February 15, 2026

திருச்சி: திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வரிசைப் பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே பிஆர்ஓ வினோத் தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

திருச்சி: திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வரிசைப் பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே பிஆர்ஓ வினோத் தெரிவித்துள்ளார்.

News February 14, 2026

திருச்சி: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

image

திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை திருடப்பட்டது. இன்று அதிகாலை தாயுடன் இருந்த ஆண் குழந்தையை மருத்துவமனை ஊழியர் உடையிலிருந்த பெண்மணி குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கொண்டு செல்வது போல ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை அரசு மருத்துவமனை போலீசார் துறையூர் அருகே கைது செய்து, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக அரசு மருத்துவமனை விரைந்தனர்.

error: Content is protected !!