News January 24, 2026
திமுகவில் ஸ்டாலினுக்கு வந்த புதிய சிக்கல்

தேர்தல் நெருங்குவதால் அமைச்சர்கள் பலரும் தங்கள் ஏரியாவில் பிரபலமானவர்களை திமுகவில் இணைத்து ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்று வருகின்றனர். இது திமுகவுக்கு சாதகம் என்றாலும், ஒருபுறம் பாதகமாக மாறியுள்ளது. தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு, வரும் தேர்தலில் சீட்டு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம்.
Similar News
News February 4, 2026
28 விரல்களை கொண்ட அதிசய மனிதன்!

குஜராத்தின் தேவேந்திர சுதர் என்பவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். ஒரு கையில் 7 விரல்கள், ஒரு காலில் 7 விரல்கள் என அவருக்கு மொத்தமாக 28 விரல்கள் உள்ளன. தச்சுத் தொழிலாளியான இவர், எக்ஸ்ட்ரா விரல்கள் பிரச்னையாக இருந்ததில்லை என கூறுகிறார். கால் விரல்களுக்காக அவர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காலணிகளையே அணிகிறார்.
News February 4, 2026
டெல்லியிலிருந்து தேமுதிகவுக்கு அழைப்பு: பிரேமலதா

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தோழமை கட்சிகள் தான் என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், ஜன.26-ல் நடந்த குடியரசுத் தின விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் தேர்தல் பிரசாரம் காரணமாக போக முடியவில்லை என்றார். மேலும், கட்சியின் எதிர்காலம் கருதியே எங்கள் கூட்டணி இருக்கும் என்றும், அதற்காக ஒருவரிடம் பேசினாலே அது கூட்டணி ஆகிவிடாது எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
‘அப்பா நாங்க 3 பேரும் சாகப் போகிறோம்’

குழந்தைகளை ஒழுங்காக கவனிக்காவிட்டால் பெற்றோருக்கு ஏற்படும் பேரிழப்பை உ.பி.,யின் காசியாபாத்தில் நிகழ்ந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொரோனா காலத்தில் செல்போனில் கொரியன் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது பிள்ளைகளை தந்தை சேதன் குமார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த பாக்கி(12), பிராச்சி(14), விஷிகா(16) மூவரும், கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்று 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.


