News January 3, 2026
திண்டுக்கல் மூச்சு திணறி குழந்தை பலி!

திண்டுக்கல் அருகே எரியோடு இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி (25).இவர் தனது மனைவி, 8 மாத ஆண் குழந்தையுடன் திண்டுக்கல் வேடபட்டியில் அவரது உறவினர் வீட்டில் குடியிருந்து வருகிறார்.கடந்த சிலநாட்களாக இவரது குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை!
Similar News
News January 28, 2026
கொடைக்கானல்: பள்ளி மாணவி தற்கொலை

கொடைக்கானல் அருகேயுள்ள தனியாா்பள்ளியில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி கீா்த்தனா 9-ம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், அவா் மன உளைச்சலில் இருந்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை கீா்த்தனா தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பாா்த்த விடுதி காவலா் உள்ளிட்டோா் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 28, 2026
JOB ALERT திண்டுக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News January 28, 2026
BREAKING: திண்டுக்கல் அருகே அதிரடி கைது

திண்டுக்கல், நாகம்பட்டி பகுதியில் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து சிலர் தங்கியிருப்பதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். விசாரணையில், அங்கு தங்கியிருந்தவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த அ.மசூத் மியா(25) மற்றும் மு.முகமது அலமின்(30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


