News January 23, 2026
தாம்பரத்தில் பரபரப்பு!

தாம்பரம் அற்புதம் நகரில் சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி மணிகண்டன் வீட்டின் மீது 3 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒரு குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சச்சின், வினோத் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். தன்னை கிண்டல் செய்த மணிகண்டனை பயமுறுத்தவே வெடிகுண்டு வீசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Similar News
News February 4, 2026
செங்கல்பட்டில் அதிரடி மாற்றம்

செங்கல்பட்டு மாவட்ட, வருவாய் அலகில் செங்கல்பட்டு, வண்டலூர், திருப்போரூர், செய்யூர் உள்ளிட இடங்களில் பணியாற்றி வந்த 6 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணவேணி, முத்து, வெங்கடேசன், தேவன், ரேணுகாதேவி மற்றும் சரவணன் ஆகிய வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News February 4, 2026
செங்கல்பட்டு: காற்றில் பறக்கவிட ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இப்பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ள நிலையில் பெண்கள் அதிக அளவில் ரேஷன் கடைக்கு வருகின்றனர். இவர்களிடம் குடிமகன்கள் வரம்பு மீறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலெக்டர் சினேகா இந்த டாஸ்மார்க் கடையை இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனாலும் இடமாற்றம் செய்யவில்லை.
News February 4, 2026
செங்கல்பட்டு: ஒரே நாளில் தாய், மகன் உயிரிழந்த கொடூரம்

மதுராந்தகம் அருகே சோத்துப்பாக்கத்தில் மகன் உயிரிழந்த தகவல் அறிந்து, செய்வதறியாது கதறி அழுது கொண்டே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மூதாட்டி அலமேலு(70) கடக்க முயன்றரர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலமேலுவின் மகன் மணி(48). கடந்து சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


