News December 31, 2025
தலையீடு இல்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா-பாக்., இடையே மத்தியஸ்தம் செய்ததாக <<18719653>>சீனா தெரிவித்தது<<>>. இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் 3-ம் தரப்பு இடம்பெறவில்லை என்று இந்தியா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தம், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் ஆலோசித்த எடுத்த முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
Similar News
News February 16, 2026
கோபி அருகே விபத்து: ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பாரியூர் தொட்டிய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அவரது இருசக்கர வாகனத்தில் மதுபான கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 16, 2026
TN இடைக்கால பட்ஜெட்.. இந்த அறிவிப்புகள் வெளியாகலாம்

TN இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், இதில் சிறுபான்மையினர், இளைஞர்களை கவரும் வகையில் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, முதியோர் உதவித்தொகையை உயர்த்துவது, கல்விக் கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் எண்ணிக்கையை உயர்த்துவது, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 16, 2026
அதிகாலையில் தமிழ் மீனவர்கள் கைது.. கொந்தளிப்பு!

காரைநகர் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களின் 2 படகுகள், வலைகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


